இந்தியா

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது

அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி விசாரித்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று கடந்த செப்டம்பர் 2-ம் தேதி 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தனிநீதிபதி பிறப்பித்த தீர்ப்பையும் இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

Back to top button