இந்தியா

தமிழ் நாட்டு அரசின் பொங்கல் பரிசுப் பொருட்கள் நாளை முதல் விநியோகம்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி நிவாரண அட்டைதாரர்களுக்கு 1 கிலோ அரிசி , 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 பணத்துடன் முழுக் கரும்பு ஒன்றும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த பொங்கல் பொருட்கள் நாளைமுதல் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ் நாடு அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button