இந்தியா

மணிப்பூரில் ஆயுதம் கடத்த முயற்சித்த கும்பல்

மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்ததுள்ளது .

அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர்.

ஆனால், ஆயுதம் வைத்திருந்த அந்த கும்பல் வீரர்களை நோக்கி சுடத்தொடங்கினர். இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் 27 வயது நபர் அந்த இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டார்.

அதேவேளையில் அசாம் ரைபிள் வீரர் ஒருவரும் குண்டு காயத்திற்கு உள்ளானார்.

அந்த கும்பல் அசாம் ரைபிள் வீரர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனத்தையும் தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கும்பலில் மேலும் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Back to top button