இந்தியா

சென்னை புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த நடிகர் ரஜினிகாந்த்

சென்னை மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்கள்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக 20-க்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை நான்கு மாவட்டங்களுக்கு 15 வண்டிகளுக்கு மேல் அனுப்பி வருகின்றனர். அதில் அரிசி, ரவை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்களும், பாய், பெட்ஷீட் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்தின் ரசிகர்கள் மன்ற மூலமாக வழங்கப்படுகின்றன.

மேலும், ராகவேந்திரா மண்டபத்திலிருந்து இந்த நிவாரண பொருட்கள் லாரி, டெம்போக்கள் மற்றும் மினி டோர் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்.

Back to top button