இந்தியா

மருத்துவரின் மருந்து சீட்டு கட்டாயம் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

மனநோய். தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

அதில் சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரண மருந்துகள் அதிக அளவில் வாங்கி வைக்கப்பட்டிருந்ததும், உரிய ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் கண்டறியப்பட்டது.

இதன் தொடர்பாக அந்த மருந்துக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைமீது மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாக கொண்டு யாருக்கும் மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும். என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Back to top button