இந்தியா

எரிவாயுவின் விலை மாத தொடக்கத்திலேயே உயர்ந்ததால் பொதுமக்கள் அதிருப்தி

தற்போது, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.1,898 ஆக இருந்த நிலையில், ரூ.101 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நவம்பர் மாத தொடக்கத்திலே வணிக சிலிண்டரின் விலை ரூ.101 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.1,898 ஆக இருந்தது. தற்போது சிலிண்டரின் விலை ரூ.101 உயர்ந்து ரூ.1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்த ஒரு மாற்றமின்றி தொடர்ந்து ரூ.918.50 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, கேஸ் சிலிண்டர்களை தயாரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் மாறுதலுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்வதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்படி அதிகாலையிலே சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் சிறிய உணவகங்கள் பெரிய அளவில் பாதிக்கும். இதனால், உணவின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Back to top button