இலங்கை

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. இந்த போராட்டத்தின் போது மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இதையடுத்து நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Back to top button