சினிமா

சினிமா வாய்ப்பை பெற்ற பிக்பாஸ் பிரபலம்… Cheque யை பதிவிட்டு பிரதீப் போட்ட பதிவு

பிக்பாஸ் சீசன் 7 இல் இருந்து வெளியேறிய பின்னர் பிரதீப் அன்டனி சினிமாவில் கால்பதிக்க போவதாக வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் கட்டத்தில் பிரதீப் அன்டனிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் தான் டைட்டடில் வின்னர் ஆவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. பின்னர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சுமத்தியதால் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவு இரட்டிப்பானது என்றே கூற வேண்டும். மேலும் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கவின் நடிப்பில் வெளியாகி இருந்த டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் பிக் பாஸுக்கு பின் பிரதீப் முதல் படத்தில் கமிட் ஆகியிருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ‘இந்த வருடம் கொஞ்சம் நடிச்சு பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அட்வான்ஸ் வாங்கிட்டேன். படம் பொருமையாதான் வரும்..எப்போ வரும்லாம் கேக்காதீங்க..வரும்போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Back to top button