சினிமா

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ

இளையராஜாவின் மகள் பவதாரணி இறப்பை தொடர்ந்து அவர் பற்றி விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிறப்பு
இசைஞானி இளையராஜாவின் இசைக் குடும்பத்தில் கடந்த 1976-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பவதாரணி.

இவர் 1984ல் திரைக்கு வந்த “மைடியர் குட்டிச்சாத்தான்” என்ற படத்தின் ஒரு பாடல் பாடினார்.

இந்த பாடலை தொடர்ந்து பவதாரணியின் இசை பயணம் ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து ராசய்யா படத்தில் இடம்பெற்ற “மஸ்தானா மஸ்தானா…” என்ற பாடலில் தென்னிந்திய பாடகிகளை ஓரங்கட்டினார்.

தேசிய விருது
தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்து கொண்ட பவதாரணி அடுத்தடுத்து திரைப்படங்களில் பாட ஆரமித்தார்.

அந்த வகையில், அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பாடியிருக்கிறார்.

இந்த பாடல்களை தொடர்ந்து இந்தியா போன்று உலகம் முழுவதும் பிரபலமாகினார் பவதாரணி.

மேலும் பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற “மயில்போல பொண்ணு ஒன்னு…” பாடலுக்கு தேசிய விருதையும் மத்திய அரசிடமிருந்து வாங்கி கொண்டார்.

இந்த நிலையில் அவருடைய சகோதரர்களான யுவன் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நிகராக தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பாடியுள்ளார்.

சுமாராக இவரின் காந்தக்குரலால் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் பயணம்
பவதாரணி பாடகி மட்டுமல்ல தன்னுடைய தந்தையை போல் படங்களுக்கு இசையமைக்கவும் ஆரம்பித்து விட்டார்.

இதன்படி, நடிகை ரேவதி இயக்கிய “மித்ர் மை பிரண்ட்” என்ற படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு அதிகமாகின. பிர் மிலேங்கே, இலக்கணம், மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

திருமணம்
இவ்வளவு சாதணைகளை செய்த பவதாரிணி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இலங்கை வந்த பாவதாரணி தனது 47-ஆவது வயதில் நேற்றைய தினம் காலமானார். இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Back to top button