இந்தியா

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் தகவல்

டெல்டா மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் உருவான தீவிர மிக்ஜாம் புயல், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. மேலும் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை புயல் கரையை கடந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு பிறகு தற்போது வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களான, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Back to top button