இந்தியா

ராகுல் காந்திக்கு தடை விதித்த பொலிஸார்

ராகுல் காந்தி மணிப்பூர் செல்லவிருந்த நிலையில் அவருக்கு தடை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் குழப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள சூழலை காண ராகுல் காந்திக்கு அனுமதி கிடைக்கவில்லை

இது தொடர்பில் மேலும் தெரியவருவது ராகுல் காந்தி செல்ல இருந்த பாதையில் கையெறி குண்டு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டே ராகுலை பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் மணிப்​பூர் மாநிலம் பிஷ்ணுப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஹெயிஸ்னம் பல்ராம் தெரிவித்துள்ளார்.

மேலும், சுராசந்த்ப்பூர் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிகாப்டர் மூலமாக செல்லுமாறு ராகுல் காந்தியை பொலிஸார் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Back to top button