இந்தியா

டி ஷர்ட் அணிவதற்கான கதை சொன்ன ராகுல் காந்தி

ஒற்றுமை பயணத்தை நடத்தி வரும் ராகுல் காந்தி தொடர்பில் பாஜக தரப்பு பல விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் அவர் அணியும் டி ஷர்ட்டைம் விட்டு வைக்காத நிலையில் தான் அணியும் டி ஷர்ட்டுக்கான கதையை சொன்னர் ராகுல் காந்தி .

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், மத்தியப்பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்ட போது 3 ஏழைச் சிறுமிகள் கந்தலான ஆடை அணிந்து என்னிடம் ஓடி வந்தனர். நான் அந்தச் சிறுமிகளை தொட்டபோது கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். நானும் அப்படி குளிரில் நடுங்கும் வரை டி ஷர்ட் மட்டுமே அணிவேன் என அந்நாளில் முடிவு செய்தேன். அன்றிலிருந்து டி ஷர்ட்டில் பாதயாத்திரை செல்கிறேன். டி ஷர்ட் மூலமாக அந்த வலியை வெளிப்படுத்துகிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button