இந்தியா

ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசுதின நிகழ்விற்கான அழைப்பிதழில் “தமிழ் நாடு”

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இடம்பெறவுள்ள நிகழ்விற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பதம் குறிப்பிடப்பட்டுள்ளத்து அத்துடன் தமிழ்நாட்டில் இலட்சனையும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

அது மட்டுமின்றி பொங்கல் பெருவிழாவின்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றும் மத்திய அரசு பயன்படுத்தும் அசோக சின்னமும் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு என்ற பதம் குறிப்பிடப்படுவதால் தமிழ்நாட்டின் சின்னமும் அதில் தவிர்க்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு-தமிழகம் என்பதற்கான விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.

இதன் வெளிப்பாடாக இப்போது தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரித்து வருகிறார். கிண்டி கவர்னர் மாளிகையில் வருகிற 26-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் குடியரசு தின வரவேற்பு விழாவுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும் திருவள்ளுவர் ஆண்டு தைத்திங்கள் என்றும் தமிழக அரசு இலட்சினையும் இடம்பெற்றுள்ளது.

Back to top button