இந்தியா

திருடருக்குள்ளிருந்த வெள்ளை மனது

திருடருக்குள்ளிருந்த வெள்ளை மனது சினிமாவில் வரும் நகைச்சுவை சம்பவங்களை போல டெல்லியில் திருடர்கள் செயற்பாடு அமைந்துள்ளது.

சம்பவத்தன்று, ஷாதாராவில் உள்ள ஃபார்ஷ் பஜார் வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியை வழிமறித்த இரு போதை ஆசாமிகள், துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களிடம் பணம் பறிக்க முயன்றனர். தம்பதியினரின் உடமைகளை சோதித்த போது 20 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

இதனால், மனமிறங்கி தங்களிடம் இருந்து 100 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றனர். இருவரும் மற்ற பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததை சிசிடிவி காட்சிகளின்படி கண்டுபிடித்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, துப்பாக்கி, 30 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதை தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதோ தெரியவில்லை .

Back to top button