இந்தியா

வாட்டிய வறுமை : தேநீர் மட்டுமே குடித்து 50 ஆண்டுகள் உயிர் வாழும் அதிசய பெண்!

50 வருடங்களாக தேநீர் மட்டுமே குடித்து உயிர்வாழும் 76 வயதான பெண் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகிவருகிறார்.

இந்தியாவின் மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர்,

இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்
அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.காலப்போக்கில் அவரது வாழ்க்கைத்தரம் மாறியபோதும் அவரது உணவு பழக்கம் மாறவில்லை.

தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது. தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர்.

Back to top button