உலகச் செய்திகள்

உக்ரைனில் ஹெலிகொப்டர் விபத்து – அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகரான கீவின் கிழக்கு பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ப்ரோவரியில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவதாகவும், மேலும் 10 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குப் பின்னர் முன்பள்ளிக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அதிலிருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, பிரதியமைச்சர் யெவன் யெனின் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button