இலங்கை

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 3000 அரச ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அமர்த்தப்பட வேண்டுமெனவும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் (29.11.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஒப்புதலைப் பெற்று ஒரு மாதத்துக்குள் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களும் அவர்கள் பணிபுரிந்த இடத்திற்கே அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button