ஆன்மிகம்

உங்களுக்கு நாள் முழுவதும் அதிர்ஷ்டமாக இருக்க வேண்டுமா? காலையில் எழுந்ததும் இதை மட்டும் பாருங்க

பொதுவாக ஒரு புதிய நாளில் நாம் காலையில் தூங்கி எழும் போது அன்றைய தினம் அதிர்ஷ்டமாகவே இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அவ்வாறு நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும், அதிர்ஷ்டத்துடனும் இருப்பதற்கு எழுந்தவுடன் சில பொருட்களை பார்த்தால் நல்லதாக இருக்குமாம்.

காலையில் எழுந்ததும் இதை மட்டும் பாருங்க
காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது கடவுளின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாம். உள்ளங்கையைப் பார்த்து உங்கள் நாளைத் தொடங்க வேண்டும். பால் மற்றும் தயிர் இந்த பொருட்களை காலையில் பார்ப்பது நல்ல அறிகுறியாகும். இரண்டும் தூய்மையின் சின்னங்களாக இருப்பதால், அதிர்ஷ்டத்திற்கு அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.

காலையில் அமைதியான ஒலிகளைக் கேட்டு தொடங்குவதும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது. அழுகை, சத்தம், சண்டை இவற்றினை கேட்டு எழும்பாமல் சங்கு மணியோசையோ அல்லது இனிய ஒலியையே கேட்டு காலை பொழுதை தொடங்கினால் நல்லது.

கரும்பு லட்சுமிக்கும், விஷ்ணுவுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு மங்களகரமான பொருளாகும். பூஜை மற்றும் பிற மங்களகரமான நிழ்வுகளின் போது பயன்படுத்தப்படுகின்றது. காலையில் கரும்பை பார்த்து நாளை தொடங்கினால் பணப்பிரச்சினை வராது.

சில இடங்களில் ஆந்தை அசுப அறிகுறியாக கருதப்படும் நிலையில், சில இடங்களில் ஆந்தை நல்ல அறிகுறியாகவும் கருதப்படுகின்றது. லட்சுமி தேவியின் வாகனமாக பார்க்கப்படும் ஆந்தையை காலையில் பார்த்தால் பணமழை கிடைக்குமாம்.
காலையில் வெளியே கிளம்பும் உங்கள் எதிரே சிவப்பு சேலை அணிந்து அலங்காரமாக சுமங்கலி வந்தால் செய்ய இருக்கும் வேலையில் வெற்றி கிடைக்குமாம்.

Back to top button