இலங்கை

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு… பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் அதற்கு ஏற்றவாறு பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றைய நிலவரப்படி ஒரு லீற்றர் டீசலின் விலை 358 ரூபாவை எட்டியுள்ள போதிலும், பேருந்துக் கட்டணங்கள் மாறாமல் உள்ளது. இன்று முன்னதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO), லங்கா IOC மற்றும் சினோபேக் ஆகியவை எரிபொருள் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன.

Back to top button