ஆன்மிகம்

75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மாற்றம்: சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.

செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

இந்து மதத்தில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. சனிபகவானால் இந்த ஆண்டு எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மகர சங்கராந்தியையொட்டி 75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த மாற்றத்தால் இந்த 5 ராசியினர் வீட்டில் செல்வம் செழிக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டு சாதகமான விடயங்கள் அனைத்தும் நடக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் லாபத்தை கிடைக்கும்.

தொழிலில் நல்ல வருமானத்தை எதிர்ப்பார்க்கலாம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த ராசியினருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் இருக்கின்றது. சங்கராந்திக்கு பிறகு இந்த ராசிக்காரர்கள் வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

பதவியில் புதிய உற்சாகத்தைப் அனுபவிப்பீர்கள். சங்கராந்திக்குப் பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் செல்வ வளவும் அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் அவை சாதகமாக மாறும் நிலைமை உருவாகும். திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இந்த ராசியினருக்கு நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். திருமணம் குறித்த விடயங்கள் திருத்தியளிக்கும்.

Back to top button