இலங்கை

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது இளைஞர்!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு விரைந்து , சிறுமியை மீட்டுள்ளதுடன் , சிறுவனை கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைதான இளைஞரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Back to top button