உலகச் செய்திகள்லண்டன்

பிரித்தானியாவில் கதிரியக்க யுரேனியத்தை இறக்குமதி செய்ய முயற்சித்த தொழிலதிபர் கைது!

பிரித்தானியாவில் கதிரியக்க யுரேனியத்தை இறக்குமதி செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் பயங்கரவாதச் சந்தேகத்தின் பேரில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்மஸுக்குப் பிறகு ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஈரானிய பதிவு செய்யப்பட்ட வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்கிராப் மெட்டல் சரக்குகளில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் குறித்த நபர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

60 வயதான அந்த நபர் , MI6 க்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்புப் பொலிசார் டிசம்பர் 29 அன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு சரக்கு பொதிக்குள் யுரேனியம் உள்ளதை கண்டுபிடித்ததாகவும் எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button