இலங்கை

காலநிலை தொடர்பான முன் அறிவிப்பு! – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button