சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்!

சுவிஸ் மாகாணம் ஒன்றில் ஒரு இளம்பெண் தன் கணவனால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், கையில் குழந்தையுடனும், மார்பில் கத்தியுடனும் நடந்துவந்த சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. நேற்றைய தினம், ஜெனீவாவிலுள்ள Petit-Lancy என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தனது 30 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர், கையில் குழந்தையுடனும், மார்பில் குத்தப்பட்ட கத்தியுடனும் நடந்து வருவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் குழந்தைக்கு காயம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. ஸ்னைப்பர்களுடன் திரண்ட பொலிசார் அந்தப் பெண்ணின் கணவன் குடியிருப்புக்குள் பதுங்கிய நிலையில், இரண்டு மணி நேரம் அவரை அவர் வெளியே வரவில்லை. பொலிசார் அந்த வீட்டைக் கண்காணிக்க ஸ்னைப்பர்களை ஏற்பாடு செய்ததுடன், மதியம் 1.00 மணியளவில், stun grenades என்னும் கருவிகளுடன் அந்த குடியிருப்புக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் அந்த நபர் வெளியே கொண்டுவரப்பட்டார். ஆம்புலன்ஸ் ஒன்றில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கடும் அதிர்ச்சியை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பொலிசார் தொடர்ந்து விசாரணையை தொடர்கின்றனர்.

Back to top button