இந்தியா

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் Chandrayaan 3 விண்கலம்!

இன்று (14) சற்று முன்னர் உலகமே உற்று நோக்கி கொண்டிருந்த இந்தியாவில் Chandrayaan 3 விண்கலம் நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, Chandrayaan 3′ விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது. பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 1/2 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்டவுன் முடிந்தவுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, இன்று மதியம் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதேவேளை நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் புறப்பட்டது. விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான் -3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Back to top button