இந்தியா

தமிழக முதல்வர் ஸ்டாலின் ED ரெய்டு குறித்து வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியாவில் தமிழகத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது பற்றி கவலை இல்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் முன்னர் இதேபோன்று சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஊடகத்தை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமலாக்கத்துறையின் சோதனை ஒன்றிய அரசின் தந்திரம் என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பீகாரிலும், கர்நாடகாவிலும் நடைபெற உள்ள கூட்டத்தை திசை திருப்ப செய்யக்கூடிய தந்திரம் தான் இது. ஆளுநரைப் போல் தேர்தல் பிரச்சாரத்திற்கு அமலாக்கத்துறையும் இணைந்துள்ளது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

Back to top button