உலகச் செய்திகள்ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது நேற்று தாக்குதல் நடத்திய நபர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளதாக அவுஸ்திரேலிய இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழர்களால் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது தாக்குதல் நடத்தியிருந்தது தெரியவந்தது.

இதேபோல், மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் மீது கடந்த 12ம்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியது குறிப்பிடத்தக்கது.

Back to top button