கனடா அரசாங்கம் இலங்கைக்கு 3மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.
அதற்கமைய ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக இணைந்து இந்த உதவியை வழங்கியுள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்குள்ளான மக்களின் அத்தியாவசிய தேவைகளை தீர்க்க இந்த நிதி பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.