நாடாளுமன்ற குழப்பம்: சபாநாயகர் சபையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்

நாடாளுமன்ற குழப்பம்: சபாநாயகர் சபையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் இடையிட்டு குழப்பம் ஏற்படுத்தினர். இதனால், சபாநாயகர் சபையை ஐந்து நிம...

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் இடையிட்டு குழப்பம் ஏற்படுத்தினர். இதனால், சபாநாயகர் சபையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் உள்ளிட்டோரே காரணம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட இருந்தார். அப்போது, அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் தனது இடத்தில் இருந்து எழுந்து சஜித் பிரேமதாசவின் இடத்திற்குச் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர். அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், சபாநாயகர் சபையை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையைத் தொடர்ந்தார்.

இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்