மாத்தளையில் நபரொருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய உணவகம்!

மாத்தளையில் நபரொருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய உணவகம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

மாத்தளையில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரயிஸ் ஒன்று 150 ரூபாவுக்கு வழங்கபடுவதாக விளம்பரப்படுத்தியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அறிந்து நபரொருவர் ஆச்சர்யத...

மாத்தளையில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரயிஸ் ஒன்று 150 ரூபாவுக்கு வழங்கபடுவதாக விளம்பரப்படுத்தியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அறிந்து நபரொருவர் ஆச்சர்யத்தோடு ஓடர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும் உணவை எந்த குறையும் சொல்வதற்கில்லையென அவர் தெரிவித்துள்ளார். மேலும் உணவுக்கான பணத்தை கடை உரிமையாளரிடம் கொடுக்கும் போது 150 ரூபாவிற்கு முட்டை ரயிஸ் கொடுத்தால் கட்டுபடி ஆகுமா என அவர் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுடைய பரக்கத்திருக்கும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, பல ஊர்களில் ஒரு சாதாரண ரயிஸ் ஒன்றுக்கு 750 ரூபாவும் வாங்கிவிட்டு இதுல என்ன இலாபம் இருக்கிறது என புளம்பியும் வருகின்றனர். இந்த தகவலை துரைராஜா நவஜோதிராஜா ராஜா முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்