அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளம்

அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இன்று(18.07.2023) இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இ...

இன்று(18.07.2023) இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினைகள் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிக்கிறது என தெரிவித்துள்ளார். தொடரந்தும் தெரிவிக்கையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்றது. இதனால், அரச ஊழியர்களான வேட்பாளர்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து 533 அரச ஊழியர்கள் இதில் அடங்குகின்றனர்.

அத்துடன், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். பகுதி பொது அரச சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள். சில அரசு ஊழியர்கள் மார்ச் முதல் அடிப்படை சம்பளம் மட்டுமே பெற்றுள்ளனர். எந்த சலுகையும் பெறப்படவில்லை. மேலும், சில அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினைகள் அரசு ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிக்கிறது. இது அவர்களின் பதவி உயர்வுகளைப் பாதிக்கிறது. எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவை தீர்க்கப்படவில்லை. நிரந்தர சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என குறிப்பட்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்