இலங்கை நாடாளுமன்றம் சட்டவிரோதமாகவே செயற்படுகின்றது, இதனை எந்த மேடையிலும், எந்த நாட்டிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்டத் தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் 125 ஆவது ஜெயந்தி தினத்தில் அவரது உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.