ஆசியாஉலகச் செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் – 111 பேர் பலி

சீனாவின் வடமேற்கு பகுதியில் பூகம்பம் தாக்கியதில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுபோலில் 5.9 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சீனாவின் கன்சு மற்றும் அதன் அண்ட மாகாணமாக கிங்காய் ஆகிய மாகாணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில கிராமங்களிற்கான மின்விநியோகமும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Back to top button