உலகச் செய்திகள்

திருட்டு குற்றத்திற்க்காக துண்டிக்கப்பட்ட கைகள் – ஆப்கானிஸ்தானில் தண்டனை

ஆப்கானிஸ்தானில் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவது வழமையான ஒன்றாகவே உள்ளது அந்த வகையில்தான் அங்கு திருட்டு குற்றத்திற்காக நான்கு பேரின் கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது,

கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்தனர்.

அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது.

பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 7-ந் திகதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.

இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதற்க்கு சர்வதேச அளவில் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அவற்றைப்பற்றிய அக்கறையின்றியே தலிபான்களின் செயற்பாடுகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button