சினிமா

நடிகர் சூர்யா விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

நேற்று (2023-11-22) சண்டை காட்சி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ரோப் கேமரா அறுந்து விழுந்து, சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவின் காயம் லேசானதாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அடுத்த சில நாட்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா விபத்தில் சிக்கிய சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா விரைவில் நலம் பெற்று திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Back to top button