சினிமா

இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்ற விஜய்யின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் விஜய் வெங்கட் பிரபுவின் திரைப்படத்தை தொடர்ந்து 3 வருடங்கள் சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தை நடித்து முடித்து விட்டு டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதனை தொடர்ந்து பிரபல இயக்கநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவிருப்பதாகவும் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் திரைப்படத்திற்கு அடுத்து சுமாராக 3 வருடங்கள் ஓய்வில் இருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வரை இந்த ஓய்வு இருக்கும் என தகவல் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறுகின்றது.

Back to top button