சினிமா

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு குறித்து மிஷ்கின் கருத்து – பெரியவர் ரஜினி அப்படி சொல்லல.. விஜய் சாதாரண ஆள் இல்லை

நடிகர் ரஜினி ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது காக்கா – கழுகு கதை ஒன்றை கூறினார். ‘கழுகு உயர பறக்கும், அதை கொத்த வேண்டும் என காக்கா வரும், ஆனால் ஒருகட்டத்தில் கீழே விழுந்துவிடும்’ என கூறி இருந்தார் ரஜினி. காக்கா என விஜய்யை தான் ரஜினி கூறினார் என இணையத்தில் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது பற்றி இயக்குனர் மிஷ்கின் பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும், “ரஜினி பேசியதை அப்படி எடுத்துக்கொள்ள வேண்டாம். யாரையும் புண்படுத்தவேண்டும் என ரஜினி சொல்லி இருக்க மாட்டார். அதே போல விஜய்யும் சாதாரண ஆள் கிடையாது. பெரிய ஆள் தான்.” “விஜய்யை இண்டஸ்ட்ரியில் இருக்கும் எல்லோருக்குமே பிடிக்கும். பெரியவர் சொன்னதை நாம் அந்தமாதிரி எடுத்துக் கொள்ள கூடாது. குழந்தைகள் எல்லாம் சண்டைபோட்டுக்கொள்ள கூடாது.” “எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று தான் மேடையில் பேசுவார்கள். ஒருத்தரை துன்புறுத்த வேண்டும் என பேச மாட்டாங்க. ரஜினி சார் ரொம்ப நாகரீகமானவர்.” “ஜெயிலர் படத்தை எல்லோரும் ரசிக்கனும். அடுத்து லியோ படம் வருது, அதுவும் பெரிய படம் தான். இது குடும்பம் மாதிரி, வீட்டுக்கு ரஜினி பெரியவர் என்றால், விஜய் இளையவர்” என மிஷ்கின் கூறி இருக்கிறார்.

Back to top button