சினிமா

நடிகர் விஜய் லியோ பட வெற்றி விழாவில் சொன்ன குட்டி கதை: அதிர்ந்த அரங்கம்.!

கடந்த 19 ம் திகதி முதல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் நிலையில் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, இன்றைய தினம் (01-10-2023) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பேசினர்.

இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விஜய், “உங்களுக்காக என் தோலை செருப்பா தச்சா கூட உங்க அன்புக்கு ஈடு ஆகாது, என்னைக்குமே உங்களுக்கு உண்மையா இருப்பேன். எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும், அதுக்கு நம்ம பசங்க தான் காரணமா இருக்கனும்” என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், “ஒரு காட்டில் யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு, இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்னும் கிடைக்காம திரும்பி வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்..? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர்… எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க. நம்மளால எதை ஜெயிக்க முடியுமோ அதை செய்வோம். ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடம் இருக்கும். பெருசா கனவு கானணும் நண்பா” என்று அவர் கூறிய போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

Back to top button