சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியை தொடங்கும் சஞ்சய்… மகனின் படப் பூஜைக்கு தளபதி வராதது ஏன்? ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்பொழுது இயக்குநராக சினிமா துறையில் என்றீ கொடுக்கவுள்ளார். தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய தளபதி விஜயை இன்று சின்ன குழந்தைக்கு கூட அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அளவிற்கு புகழின் உச்சத்தை தொட்டுவிட்டார்.

மேலும், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் அவர்களும் திரைப்படம் குறித்த படிப்புகளை, மேலை நாடுகளுக்கு சென்று படித்துள்ளார். ஆனால் தனது தந்தையைப் போல ஒரு நடிகராக மாறாமல், இயக்குநராக களமிறங்க விரும்பி அதற்கான பணிகளை சில மாதங்களுக்கு முன்பு அவர் துவங்கினார். அந்த சூழலில் தான், தமிழ் சினிமாவில் தற்பொழுது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் லைகா நிறுவனம் அவருக்கு இயக்குனராக ஒரு வாய்ப்பை அளித்தது.

இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தின் ஒரு அலுவலகத்தில் தற்பொழுது சஞ்சய் இயக்கவிருக்கும் படத்திற்கான பூஜைகள் நடந்துள்ளது என்றும், அந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பூஜையில் விஜய் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தந்தை இல்லாமல் மகன் தனது முதலாவது படத்துக்கான பூஜையில் கலந்துக்கொண்டது ஏன்?

இதேவேளை, அவர்கள் இருவருக்குள் ஏதேனும் முறன்பாடுகள் இருக்கிறதா? என்கின்ற கோணத்தில் தற்பொழுது இணையதளவாசிகள் மற்றும் விஜயின் ரசிகர்களும் பேச தொடங்கியுள்ளனர். ஜேசன் சஞ்சயின் குறித்த செயற்பாடு தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தகக்கது. ஆனால் அந்த பட பூஜைக்கு விஜய் வராதது ஏன் என்கின்ற காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

Back to top button